×

மறையூர் கிராமத்தில் அடி பம்பிலிருந்து தொடர்ந்து வெளியேறி வரும் காற்று ஆய்வு செய்ய பொதுமக்கள் கோரிக்கை

மயிலாடுதுறை, டிச.11: மயிலாடுதுறை அருகே உள்ள மறையூர் கிராமத்தில் கோவங்குடி கிராம நிர்வாக அலுவலகம் முன் அடி பம்பில் இருந்து காற்று வெளியேறுவது அப்பகுதி மக்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உபயோகத்தில் இல்லாத பம்பிலிருந்து கடந்த 10 தினங்களாக காற்று வெளியேறிவருதால் அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உபயோகத்தில் இல்லாத அடிப்பம்பை பிடுங்கிய பிறகும் காற்று வெளியேறி வருகிறது. இரவு நேரத்தில் அப்பகுதியில் செல்வதற்கு பயமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். அப்பகுதியை சேர்ந்தவர்கள் அந்த அடிபம்பை அப்படியே கழட்டி தூக்கியபோதும் தரையில் பதிக்கப்பட்டுள்ள குழாயிலிருந்து காற்றுச்சத்தம் கேட்டபடியே உள்ளது, இதுகுறித்து உடனடியாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுகொண்டனர்.

Tags : village ,Maraiyur ,
× RELATED பைக், டிராக்டர் நேருக்கு நேர் மோதி...